Thursday, 24 September 2015

cont2

ஒரு  முறை  திருவீழிமிழலை  உ த் சவத்தின்  போது  தேர்  ஓரிடத்தில்  நகராது  நின்றுவிட்ட  போது  இவர்  அத்தேரை  வடமே  இல்லாமல்  ஓட  வைத்து  வீதி  வலம்  வரசெய்தார் . யோக  பலத்தால்  அவருடைய  தேகம்  அதிக  பொலிவுடன்  திகழ்ந்தது . அவருடைய  தேக  காந்தி  பல  பெண்களை   வசீகரித்தது . அவருடைய  ஆத்ம  சக்தியால்  பல பெண்கள்  அவரை  போல உருவமுடைய  பிள்ளைகளை  ஈன்றனர் . இதை  கண்ட  மன்னன்  மாளிகைதேவரை  சந்தேகித்து  அவரை  தண்டிக்க  வீரர்களை  அனுப்பினான் .  அனால்  அங்கு  கோவில்  மதில்  சுவற்றில்  அமைக்கப்பட்டிருந்த  நந்தி  சிலைகள்  உயிர்பெர்று  அவ்வீரர்களை  தாக்கி  விரட்டின . இவ்வாறு  பல  அற்புதங்களை  புரிந்த  சித்தராவர் . இவர் தில்லை  கூத்தனின்  மேல்  மிக  பக்தியுடன்  பாடிய  பாடல்கள்  திருவிசைப்பா வில்  அடங்கும் .

No comments:

Post a Comment