ஒரு முறை திருவீழிமிழலை உ த் சவத்தின் போது தேர் ஓரிடத்தில் நகராது நின்றுவிட்ட போது இவர் அத்தேரை வடமே இல்லாமல் ஓட வைத்து வீதி வலம் வரசெய்தார் . யோக பலத்தால் அவருடைய தேகம் அதிக பொலிவுடன் திகழ்ந்தது . அவருடைய தேக காந்தி பல பெண்களை வசீகரித்தது . அவருடைய ஆத்ம சக்தியால் பல பெண்கள் அவரை போல உருவமுடைய பிள்ளைகளை ஈன்றனர் . இதை கண்ட மன்னன் மாளிகைதேவரை சந்தேகித்து அவரை தண்டிக்க வீரர்களை அனுப்பினான் . அனால் அங்கு கோவில் மதில் சுவற்றில் அமைக்கப்பட்டிருந்த நந்தி சிலைகள் உயிர்பெர்று அவ்வீரர்களை தாக்கி விரட்டின . இவ்வாறு பல அற்புதங்களை புரிந்த சித்தராவர் . இவர் தில்லை கூத்தனின் மேல் மிக பக்தியுடன் பாடிய பாடல்கள் திருவிசைப்பா வில் அடங்கும் .
No comments:
Post a Comment