Friday, 4 September 2015

cont2

அம்மையே  அப்பா  ஒப்பிலாமணியே  அன்பினில்  விளைந்த  ஆரமுதே
பொய்மையே  பெருக்கிப்  பொழுதினை  சுருக்கும்  புழுத்தலை  புலையனேன்  தனக்கு
செம்மையே  ஆய  சிவபதம்  அளித்த  செல்வமே  சிவபெருமானே
இம்மையே  உனை  சிக்கெனப்  பிடித்தேன்  எங்கு  எழுந்தருளுவது  இனியே |


பால்  நினைந்து  ஊட்டும்  தாயினும்  சால  பரிந்து , நீ   பாவியேன்  உடைய
ஊனினை  உருக்கி  உள்ளொளி  பெருக்கி  உலப்பிலா  ஆனந்தமாய
தேனினை  சொரிந்து  புறம்  புறம்  திரிந்த  செல்வமே  சிவபெருமானே
யான்  உனை  தொடர்ந்து  சிக்கெனப்பிடித்தேன்  எங்கு  எழுந்து  அருளுவது  இனியே 

No comments:

Post a Comment