Thursday, 19 February 2015

yamamani

பரமாச்சாரியார்   கூறியவாறு  பதம்  பிரித்து  இருக்கிறது .
யாம்  ஆமா? நீ  ஆம்  ஆம்  மாயாழி | காமா | காணா நாகா |
காணாகாமா |காழியா |மாமா ய | நீ  மாமாயா |
யாம் ஆமா? அற்ப  மனிதர்களான  எங்களால்  ஏதும்  பண்ண  முடியுமா ?'நீ  ஆம்  ஆம் ' சர்வ  சக்தனான  உன்னால்  முடியும் , நிச்சயம்  முடியும் .' மாயாழி ' பெரிய  யாழை  கையில்  வைத்த  வீணாதார  தட்சிணா மூர்த்தியாக  ஈஸ்வரன் . 'காமா' பேரழகனே , 'காணாநாகா ' காணும்படியாக  நாகாபரணம்  பூண்டிருப்பவனெ . 
'காணாகாமா ' காமனை  கண்  காண  முடியாது  எரித்து விட்டவனே  'காழீயா ' சீர்காழியில்  குடிகொண்டிருப்பவனே |(சீர்காழி  சம்பந்தர்  பிறந்த  ஸ்தலம் ). 'மாமாயா 'மஹா லக்ஷ்மி பதியான ,மாயாச்வரூபியான  விஷ்ணுவே .(சிவ  விஷ்ணு  பேதம்  இல்லை என்று  வருகிறது )'நீ  மாமாயா '  நீ  என்றால்  நீக்கு .ஒரே  இருட்டாயுள்ள  மாயையை  நீக்கு . என்று  ப்ரார்த்திக்கிறார் .
 அப்பர்  தண்டகத்திலும் 'நாரணன் காண்  நான்முகன்காண் ' என்று  சிவ விஷ்ணு  பேதமின்மை  வருகிறது .

2 comments: