அன்னையால் பால் ஊட்டப்பட்டு பாட தொடங்கிய சம்பந்தர் ஈசனையும் அன்னையையும் தன் பெற்றோராய் ஏற்று பக்தி செலுத்தியதில் வியப்பேதும் இல்லை .பெற்ற பாசத்தோடு தங்க தாளமும் சிவிகையும் ஈந்த அவர்கள் பாசத்தையும் நாம் உணரலாம் . ஆகையால் அவர் பாக்களில் ஒரு உறுதியும் அவர் சொல் ஓர் ஆணை என மதிக்க தக்கதாகவும் இருந்தன . முதல் பாட்டிலேயே
''தோடுடைய செவியன் '' என்றா பாட்டிலேயே தெரியவரும் .
''ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே ''
மங்கயற்கரசி எனும் ஆலவாய் பதிகத்தில்
''கன்னலம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம்பாட வல்லவர் இமையோர் ஏற்ற வீற்றிருப்பவர் இனிதே ''
அவர் ஈசன் அடி சேர்வதன் முன் பாடிய 'காதலாகி கசிந்து ' ஏனும் பதிகத்தில்
''ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து
ஏத்த வல்லார் எல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே '' என்று பாடுகிறார் . கூடியிருந்த அனைவரும் அவருடைய அருளலால் ஈசனடி சேர்கின்றனர்
''தோடுடைய செவியன் '' என்றா பாட்டிலேயே தெரியவரும் .
''ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே ''
மங்கயற்கரசி எனும் ஆலவாய் பதிகத்தில்
''கன்னலம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம்பாட வல்லவர் இமையோர் ஏற்ற வீற்றிருப்பவர் இனிதே ''
அவர் ஈசன் அடி சேர்வதன் முன் பாடிய 'காதலாகி கசிந்து ' ஏனும் பதிகத்தில்
''ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து
ஏத்த வல்லார் எல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே '' என்று பாடுகிறார் . கூடியிருந்த அனைவரும் அவருடைய அருளலால் ஈசனடி சேர்கின்றனர்
No comments:
Post a Comment