Monday, 9 February 2015

velur

பத்திமையாற்  பணிந்தடியேன்  றன்னை  பன்னாட்
  பாமாலை  பாட  பயில்வித்தானை
எத்தேவு  மேத்து  மிறைவன்  றன்னை
  யெம்மானை  என்னுள்ளத்துள்ளே  யுறும்
அத்தேனை  யமுதத்தை  யாவின்  பாலை
  யண்ணிக்கும்  தீங்கரும்பை  யரனை  யாதிப்
புத்தேளை  புள்ளிருக்கு  வேளுரானை ப்
  போற்றாதே  யாற்ற நாள்  போக்கினேனே |
அப்பர்  போன  பதிகத்தில்  அரற்றிய து  போலவே   புள்ளிருக்கு  வேளுரானை  போற்றியும்  தான்  பாடாமல்  இத்தனை  நாட்கள்  வீணாக்கியதை  மனம்  நொந்து  தாண்டகங்கள்  பாடுகிறார் . தனக்கு  நாவுக்கரசன்  என்று  பெயரும்  சூட்டி  தன்னை  பாடவித்தான்  என்பதை  அடிக்கடி  நினைவு  கூறூகிறார் . திருவையாறு  ஈசன்  தன தலைமீது  பாதம்  வைத்து  ஆண்டு  கொண்டதையும்  நிறைய  பாடல்களில்  நினைவு  கூறுகிறார் .' ஓசை  ஒலியெல்லாம் '  என்னும்  திருவையாறு  தாண்டகத்தில்  
"பிரானாய்  அடியென்மேல்  வைத்தாய்  நீயே " என்று  பாடுகிறார் .

No comments:

Post a Comment