Wednesday, 4 February 2015

thandakam

அரியானை  அந்தணர்தம்  சிந்தையானை
 அருமறையின்  அகத்தானை  அணுவையார்க்கும்
தெரியாத  தத்துவனை  தேனை  பாலை
 திகழொளியை  தேவர்கள்  தம்கோனை  மற்றை
கரியானை  நான்முகனை  கனலை  காற்றை
 கனைகடலை  குலவரையை  கலந்து  நின்ற
பெரியானை  பெரும்பற்ற  புலியுரானை
 பேசாத  நாளெல்லாம்  பிறவா  நாளே |
அப்பர்   தாம்  சமண  மதத்தில்  இருந்த  போது  தாம்  செய்த  சிவநிந்தனையை  எண்ணி   எப்போதும்  மன  வேதனை  கொண்டே  இருந்தார் . இவ்வாறு  பல  பாடல்களில்  தன்  மன  சோர்வை  வெளி  படுத்துகிறார் . ஈசனை  பாடாத  நாளெல்லாம்  வாழ்ந்தும்  வாழாத  நாளாகவே   கருதுகிறார் .அத்தனை  நாட்கள்  விணானதை  மிகுந்த  வேதனையுடன்  வெளிப்படுத்துகிறார் . பெரும்பற்ற  புலியூரானின்  மேல்  இவ்வாறு  10 தாண்டகங்கள்  பாடியுள்ளார் .

1 comment: