Wednesday, 11 February 2015

cont.

நின்னாவார்  பிறரின்றி  நீயே  ஆனாய் '' எனும்  தாண்டகத்தில்
   பூமிமேல்  புகழத்தக்க  பொருளே  உன்னை
என்னானாய்  என்னானாய்  என்னின்  அல்லால்
   ஏழையேன்  என்  சொல்லி  எத்துகேனே |
  என்று  அப்பர்  அரற்றுகிறார் .''
 ''திருவடியென்  தலைமேல்  வைத்தார்   நல்லூரெம்பெருமானார்  நல்லவாறே '' மேலும்  உற்றிருந்த  எனும்  திருவையாறு  தாண்டகத்தில்  ''பிரானாய்  அடியேன்மேல்  வைத்தாய்  நீயே '' இவையெல்லாம்  அப்பரடிகளின்   எளிமையான  பக்தியை  காண்பிக்கின்றன
 இப்போது  திருஞான சம்பந்தரின்  பாக்களை  நோக்கினால்  அவ ரூடைய  பக்தியின்  தன்மை  காணலாம் . அவர்  அன்னையால்  ஞானப்பால்  ஊட்டப்பட்டு  குழந்தை யாகவே  பாட  தொடங்கினார் 

No comments:

Post a Comment