Wednesday, 21 January 2015

matherpirai

   மாதர் பிறை  கண்ணியானை  மலையான்  மகளோடும்  பாடி
 போதொடு  நீர்  சுமந்தேத்தி   புகுவார்  அவர்  பின்  புகுவேன்
 யாதும்  சுவடு  படாமல்  ஐ யாரடைகின்ற போது
 காதன்  மடப்பிடியோடும்  களிறு  வருவன  கண்டேன்
 கண்டேன்  அவர் திருப்பாதம்  கண்டறியாதன  கண்டேன் |
அப்பர்பிரான்  யாதும்  சுவடு  படாமல்  ஐயாரை  அடைந்த  போது  ஒரு  நொடியில்  தாம்  வந்த  அதிசயம்  கண்டு  மெய்சிலிர்த்து   போகிறார் . ஈசனை  மலையான்  மகளோடு  சேர்த்து  கண்ட  காட்சி  உலகின்  எல்லா  ஜீவராசிகளும்  தத்தம்  துணையோடு  போவதாக  தோ ற்றம் அளிக்கிறது . அவர்  முன்  கைலாய  காட்சி  அப்படியே  தோன்ற  அவர்   எல்லையற்ற  மகிழ்ச்சி   அடைகிறார் . ஐயனின்  திருப்பாதம்   கண்டு , கண்டறியாத  காட்சி  கண்டதாக  மெய்சிலிர்த்து  பாடுகிறார் . ஒவ்வொரு  பாட்டிலும் ' கண்டறியாதன '' கண்டதாக சொல்லி ,சொல்லி  தன்  எல்லையில்லா  மகிழ்ச்சியை   வெளிக்காட்டுகிறார் .இந்த  பதிகத்தின்  வாயிலாக  ஈசனின்  எல்லையற்ற  அருளை  நம்மால்  புரிந்து  கொள்ள  முடிக்கிறது .   

No comments:

Post a Comment