Monday, 19 January 2015

appar

அப்பரடிகள்  பல  திருத்தலங்களை    சேவித்து  பல  பதிகங்களை  பாடிக்கொண்டு காளத்தி  நாதரை  காண  காலஹஸ்தி  செல்கிறார் . அவருக்கு  கைலாயத்திற்கு  சென்று  கைலாயநாதரை  காணும்  பேராவல்  எழுந்தது . தன்  சிஷ்யர்களை  அங்கேயே  இருக்க  கூறிவிட்டு  அவர்  தனியாக  கைலாயம்  நோக்கி   பயணத்தை  துவங்குகிறார் .வயது  முதிர்ந்த  காரணத்தால்  பயணம்  நீண்டது .நா ள் செல்ல  செல்ல  அவர்  கால்கள்  ஒத்துழைக்க  மறுத்தன . கைகளை  ஊன்றி  தவழ்ந்தும் உடலால்  தேய்த்துகொண்டும்  முன்னேற  முற்பட்டார் . கைகள் .கால்கள்  உடல்  எல்லாம்  ரணமாயின . ஆயினும்  அவருடைய  கைலைநாதரை  காணும்  பேராவல்  அதிகமாயிற்றே  தவிர  குறையவில்லை .

No comments:

Post a Comment