Tuesday, 13 January 2015

cont.

நாவுக்கரசர்  கோவிலில்  ஈசன்  சன்னதி முன்  பையன்  உடலை  கிடத்தினார் . ஈசனை  நோக்கி  ''ஒன்றுகொலாம் ''  எனும்  பதிகத்தை  பாடுகிறார் .இந்த  பதிகத்தில்  ஐயனின்  மேன்மைகளை  ஒன்று  முதல்  பத்து  வரை  வரிசை  படுத்தி  பாடுகிறார் .இந்த  பதிகத்தின்மூலம்  அவ ர்  ஒரு  கோரிக்கையையும்  வைக்கவில்லை .   அவர்  உள்ளத்தில்  சதா  குடிகொண்டிருக்கும்   ஈசன்  அறிய  மாட்டாரா  அவரது  மனத்தில்  உள்ள  கோரிக்கையை ? அவரது  பத்து  பாடல்கள்  முடிந்ததும்  எங்கிருந்தோ  வந்த  நாகம்  சிறுவனின்  காலில்  செலுத்தப்பட்ட  விஷத்தை  உறிஞ்சி  மீண்டும்  எடுத்துக்கொண்டு  வந்த  வழியே  சென்றது. சிறுவனும்  தூக்கத்தில்  இருந்து  விழித்தவன்  போல்  எழுந்து  கொண்டான் . நாவுக்கரசரும் , பெற்றோரும்  அடைந்த  மகிழ்ச்சிக்கு  எல்லை  ஏது ? அவர்களுக்கு  அப்பர்  மேல்  கொண்ட  பக்தி  பன்  மடங்காகியது . இப்போதும்  திங்களூரில்  பாம்பின்  விஷம்  யாரையும்  பாதிப்பதில்லை  என்று  கூறப்படுகிறது .  

No comments:

Post a Comment