Friday, 9 January 2015

appar

திருநாவுக்கரசர்  தண்ணீர்  பந்தல் ,அன்னசத்திரம் ,வைத்தியசாலை ,பள்ளி  என  தன்  பெயரால்  இத்தனை  அறப்பணிகள்  செய்பவர்  யார்  என  பெரும்  ஆச்சர்யத்தில்  மூழ்கினார்   அப்பர்  அடிகள் . அங்குள்ளோரை  விசாரித்து  அறிய  முற்பட்டார் .அவ்வூரில்  வசிக்கும்  அப்பூதி  அடிகள்  நாயனாரே  இவற்றை  எல்லாம்  அமைத்தவர்  என்று  அறிந்து  அவரை  காண  விரைந்தார் . அவரிடம்  இத்தனை  தான   தர்மங்களையும்  தன்  பெயரில்  செய்யாமல்  வேறு  யாரோ ஒருவன்  பெயரில்  செய்ய  காரணம்  வினவுகிறார் . அப்பூதி  அடிகள்  மிக  சினம்  கொண்டு   பரமனால்  பெயர்  சூட்டப்பட்டு ,அவரால்  கடும்  விஷம் . சுண்ணாம்பு  காளவாய் , கல்லை கட்டி  சமுத்திரத்தில்  வீசியது  போன்ற  பல  பல  கடும்  சோதனைகளை  ஈசன்  மீது  கொண்ட  அசையாத  நம்பிக்கை  யால்  அவரால்  ஒருசிறிதும்  பாதிப்பின்றி  மீண்டு  வந்த  அவரையா  யாரோ  ஒருவர்  என்கிறீர் ? அப்படியாயின்  நீர்  சைவரே  அல்ல  என்று  கடுமையாக  கூறினார் . அப்போது  அப்பரடிகள்  தாங்கள்  இத்தனை  உயர்வாக  குறிப்பிட்ட  அந்த  நாவுக்கரசர்  தாமே  என்று  கூறூகிறார் 

No comments:

Post a Comment