திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் ,அன்னசத்திரம் ,வைத்தியசாலை ,பள்ளி என தன் பெயரால் இத்தனை அறப்பணிகள் செய்பவர் யார் என பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கினார் அப்பர் அடிகள் . அங்குள்ளோரை விசாரித்து அறிய முற்பட்டார் .அவ்வூரில் வசிக்கும் அப்பூதி அடிகள் நாயனாரே இவற்றை எல்லாம் அமைத்தவர் என்று அறிந்து அவரை காண விரைந்தார் . அவரிடம் இத்தனை தான தர்மங்களையும் தன் பெயரில் செய்யாமல் வேறு யாரோ ஒருவன் பெயரில் செய்ய காரணம் வினவுகிறார் . அப்பூதி அடிகள் மிக சினம் கொண்டு பரமனால் பெயர் சூட்டப்பட்டு ,அவரால் கடும் விஷம் . சுண்ணாம்பு காளவாய் , கல்லை கட்டி சமுத்திரத்தில் வீசியது போன்ற பல பல கடும் சோதனைகளை ஈசன் மீது கொண்ட அசையாத நம்பிக்கை யால் அவரால் ஒருசிறிதும் பாதிப்பின்றி மீண்டு வந்த அவரையா யாரோ ஒருவர் என்கிறீர் ? அப்படியாயின் நீர் சைவரே அல்ல என்று கடுமையாக கூறினார் . அப்போது அப்பரடிகள் தாங்கள் இத்தனை உயர்வாக குறிப்பிட்ட அந்த நாவுக்கரசர் தாமே என்று கூறூகிறார்
No comments:
Post a Comment