Sunday, 10 November 2019

சுந்தரர்   வேதனை   அடைந்து   தியானித்தார் .  ஐயனே   உன்   சொற்படி   மணிமுத்தாறில்   இட்டு   கமலாலயத்தில்   எடுத்துக்கொள்ள   நீதானே   ஆணையிட்டாய் .  இப்போது   கைவிட்டாயே !  என்று   கண்ணீர்   விட்டார் .  அவர்   உள்ளத்திலிருந்து   பதிகம்   பீரிட்டு வந்தது .அவர்   பாடி  முடிக்கும்  முன்பே   குளத்தின்   அடியிலிருந்து   பொற்கிழி   மேலே   வந்தது .  பரவையார்   ஒரு   காசை  எடுத்து   உரைத்தார்  .அது   மாற்று   குறைவாக   இருந்தது .  பதறி   போனார் . சுந்தரர்  மாற்று  உறைத்து   பார்த்துத்தானே  வாங்கினேன்   என்று   கலங்கி   போனார் .  பிறகு   ஐயன்   கருணையால்    மாற்று   குறையாத   பொன்னாயிற்று .  இருவரும்   ஆலயம்   சென்று   ஈசனை   வழிபட்டு   வீடு   திரும்பினர் .

No comments:

Post a Comment