Sunday, 10 November 2019

சுந்தரர்   அரூரில்   வந்து   ஆரூர்   தியாகேசரை   மறுபடி   கண்ட   ஆனந்தம் . அவரை   தினம்   தொழுது   மகிழ்ந்து   வந்தார்  .  அப்போது   ஒரு   நாள்   பரவையாருக்கு   ஒரு   நாள்   பணம்   தேவைப்பட்டது .  சுந்தரரிடம்   தெரிவித்தாள் .   அதற்கு   சுந்தரர்   பழமலைநாதரிடமிருந்து   12ஆயிரம்   பொன்   பெற்று    மணிமுத்தாறில்   போட்டிருப்பதாக   கூறி   என்னுடன்   கமலாலயத்திற்கு   வந்தால்   எடுத்துக்கொள்ளலாம்   என்று   கூறினார் .  பரவையார்   அதிசயமடைந்தார் .  நம்ப   முடியவில்லை .  இருந்தும்   கிளம்பி   இருவரும்   ஆலயம் அடைந்து   வீதிவிடங்கரை   சேவித்து   கொண்டு   கமலாலயம்   வந்தடைந்தனர் .  வடகிழக்கு   கரையில்   பரவையாரை   நிறுத்தி   விட்டு   சுந்தரர்   குளத்தில்   இறங்கினார் .   பொன்னை   தேடலானார் .  தம்மை   அதட்டி   பொன்னை     பெற்ற   தம்பிரான்   தோழருடன்   ஐயன்   விளையாட   நினைத்தார் .  சுந்தரர்   குளத்தின்   தரை   எல்லாம்   தேடினார் .  சேறும்   சகதியும்   தான்   கிடைத்தது .  பொன்   கிடைக்கவில்லை .  பரவையார்   'ஆற்றில்   போட்டதை   குளத்தில்   தேடினால்   எப்படி'   என்று   பரிகாசித்தார் .   

No comments:

Post a Comment