சுந்தரர் அரூரில் வந்து ஆரூர் தியாகேசரை மறுபடி கண்ட ஆனந்தம் . அவரை தினம் தொழுது மகிழ்ந்து வந்தார் . அப்போது ஒரு நாள் பரவையாருக்கு ஒரு நாள் பணம் தேவைப்பட்டது . சுந்தரரிடம் தெரிவித்தாள் . அதற்கு சுந்தரர் பழமலைநாதரிடமிருந்து 12ஆயிரம் பொன் பெற்று மணிமுத்தாறில் போட்டிருப்பதாக கூறி என்னுடன் கமலாலயத்திற்கு வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார் . பரவையார் அதிசயமடைந்தார் . நம்ப முடியவில்லை . இருந்தும் கிளம்பி இருவரும் ஆலயம் அடைந்து வீதிவிடங்கரை சேவித்து கொண்டு கமலாலயம் வந்தடைந்தனர் . வடகிழக்கு கரையில் பரவையாரை நிறுத்தி விட்டு சுந்தரர் குளத்தில் இறங்கினார் . பொன்னை தேடலானார் . தம்மை அதட்டி பொன்னை பெற்ற தம்பிரான் தோழருடன் ஐயன் விளையாட நினைத்தார் . சுந்தரர் குளத்தின் தரை எல்லாம் தேடினார் . சேறும் சகதியும் தான் கிடைத்தது . பொன் கிடைக்கவில்லை . பரவையார் 'ஆற்றில் போட்டதை குளத்தில் தேடினால் எப்படி' என்று பரிகாசித்தார் .
No comments:
Post a Comment