ஈசன் சுந்தரரின் மனதில் மறுபடியும் சிவாலயங்கள் சேவிக்கும் ஆவலை தூண்டினார் . பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு தொண்டை நாட்டு தலங்களை சேவிக்க புறப்பட்டார் . முதலில் திருநள்ளாறு சென்று ஐயனை வணங்கி மகிழ்ந்தார் . திருக்கடவூர் , திருவெண்காடு மற்றும் பல தலங்களை தரிசித்து கொண்டு வழியில் திருநீடூர் செல்லாமல் பயணப்பட்.டார் . இறைவன் அவருக்கு அதை உள்ளத்தில் உணர்த்தினார் . சுந்தரர் தன் பிழைக்கு மிக்க வருந்தி அதை தமக்கு நினைவு படுத்திய ஐயனின் கருணையை நினைந்து நினைந்து உருகி அப்பெருமானை வணங்கி பயணம் தொடர்ந்தார் . திருநீடூர் வழிபட்டு திருப்புன்கூர் சென்றார் . அங்கிருந்து திருக்கோலக்கா சென்றடைந்தார் . அவ்வூர் பெருமான் சம்பந்தரின் பிஞ்சு கரங்கள் தாளம் போட்டு நோகாமல் இருக்க பொற்தாள கள் கொடுத்து அம்மையின் அருளால் அவைக்கு ஓசை எழ செய்த அந்த திருவிளையாடலை நினைத்து நெக்குருகி பதிகங்கள் பாடி மகிழ்ந்தார் .
No comments:
Post a Comment