சுந்தரர் கூடலை ஆற்றுர்ஐயனை மனமுருகி தரிசனம் செய்து மகிழ்ந்து முதுகுன்றம் அடைந்தார் . தம்பிரான் தோழர் அல்லவா? உரிமையுடன் அவரை தமக்கு பொன் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் . ஐயனும் உடனே பன்னிரெண்டாயிரம் பொன் கொடுத்தார் . அதை எவ்வாறு ஆரூர் எடுத்து செல்வது என்று மேலும் வினவ அதை மணிமுத்தாறில் போட்டு கமலாலயத்தில் எடுத்துக்கொள்ளுமாறு அருள்புரிந்தார் . உடனே சுந்தரரும் அவ்வாறே பன்னிரெண்டாயிரம் பொன்னையும் எம்பெருமானை தியானித்து மணிமுத்தாறில் விட்டார் . அங்கிருந்து சுந்தரர் தில்லை வந்தடைந்தார் . பேரூரில் ஆல்டலரசனை நடன கோலத்தில் கண்டு மகிழ்ந்த அதே கோலத்தில் மறுபடி தில்லையில் கண்டு பேரானந்தம் அடைந்தார் . அவ்வூர் வீதிகளில் தொழுதபடி நடந்து அந்தணர்களையும் தொழுது அங்கிருந்து கிளம்பி பல தலங்களை சேவித்துக்கொண்டு பல பதிகங்கள் பாடி மனமகிழ்ந்து ஐயனையும் மனம் குளிரச்செய்து ஆரூர் வந்து சேர்ந்தார் .
No comments:
Post a Comment