Saturday, 2 November 2019

ஆற்றுர்   ஈசன்    தேனினும்   இனிதான   சுந்தரர்   பாடலை   கேட்க   ஒரு   வழி   செய்தார் .  பயணம்   தொடங்கிய   சுந்தரருக்கு   முதுகுன்றம்   செல்ல   பாதை   சரியா   என   சந்தேகம்   ஏற்பட்டது .  அதுவும்   ஆற்றுர்   ஈசனின்   விளையாடலே.  அவர்   ஒரு   கிழவன்   உரு   எடுத்துக்கொண்டு   அங்கு   சென்றார் .  சுந்தரர்   அவரை    பார்த்து   ஐயா    முதுகுன்றம்   செல்லும்   வழி   இதுதானே   என்று   வினவினார் .   முதியவர்   உருவில்   இருந்த   ஈசன்   'ஆற்றுர்   செல்ல   இதுதான்   வழி '  என்று   கூறி   சென்றார் .  சுந்தர அவருக்கு   காதில்    விழவில்லையோ   என்று   எண்ணி   திரும்பி    பார்த்தார் .  திடுக்கிட்ட   சுந்தரர்        கண்ணுக்கு   எட்டிய   வரை   அவரை   எங்கும்   காணாமல்   திகைத்தார்.   ஆற்றுர்   ஐயனே   தம்மை   தம்   கோயிலுக்கு   வழி   காட்டி    வ ர   செய்திருப்பதை   கண்டு   மெய்சிலிர்த்துப்போனார் .  அவருடைய   இச்செயலால்   பரவசமடைந்து   கூடலைஆற்றுர்     சென்று   'வடியுடை   மழுவேந்தி '   எனும்   பதிகம்   பாடி  துதித்தார் .   தன்னை   வரவழைக்க   முதியவராய்   வந்து   வழிகாட்டிய   ஐயன்   அன்பை   நினைந்து   நினைந்து   உருகினார் .   

No comments:

Post a Comment