ஆற்றுர் ஈசன் தேனினும் இனிதான சுந்தரர் பாடலை கேட்க ஒரு வழி செய்தார் . பயணம் தொடங்கிய சுந்தரருக்கு முதுகுன்றம் செல்ல பாதை சரியா என சந்தேகம் ஏற்பட்டது . அதுவும் ஆற்றுர் ஈசனின் விளையாடலே. அவர் ஒரு கிழவன் உரு எடுத்துக்கொண்டு அங்கு சென்றார் . சுந்தரர் அவரை பார்த்து ஐயா முதுகுன்றம் செல்லும் வழி இதுதானே என்று வினவினார் . முதியவர் உருவில் இருந்த ஈசன் 'ஆற்றுர் செல்ல இதுதான் வழி ' என்று கூறி சென்றார் . சுந்தர அவருக்கு காதில் விழவில்லையோ என்று எண்ணி திரும்பி பார்த்தார் . திடுக்கிட்ட சுந்தரர் கண்ணுக்கு எட்டிய வரை அவரை எங்கும் காணாமல் திகைத்தார். ஆற்றுர் ஐயனே தம்மை தம் கோயிலுக்கு வழி காட்டி வ ர செய்திருப்பதை கண்டு மெய்சிலிர்த்துப்போனார் . அவருடைய இச்செயலால் பரவசமடைந்து கூடலைஆற்றுர் சென்று 'வடியுடை மழுவேந்தி ' எனும் பதிகம் பாடி துதித்தார் . தன்னை வரவழைக்க முதியவராய் வந்து வழிகாட்டிய ஐயன் அன்பை நினைந்து நினைந்து உருகினார் .
No comments:
Post a Comment