Friday, 15 November 2019

சுந்தரர்   பரவையார்   மாளிகையில்   இருந்துகொண்டு   ஆரூரரின்   அருமை   தோழன்   பக்தன்     அடியான்   எல்லாமாக   இருந்து   வழிப்பட்டு   வரும்கால்  ஐயன்   சுந்தரர்   இப்புவியில்   பிறப்பெடுத்ததன்   காரணங்களில்   ஒன்று   நிறைவேறினாலும்   மற்ற   ஒன்று   மீதம்   இருப்பதை   மனதில்   கொண்டு   அவருக்கு   மீண்டும்   சிவபெருமான்   குடிகொண்டிருக்கும்   மற்றும்   பல   ஆலயங்களை   தரிசிக்கும்   ஆவலை   தூண்டினார் .  சுந்தரரின்   பெரும்   சாதனையாக  இவ்வுலகம்   பெற்றது    ஈசன்  அடியெடுத்து    கொடுக்க   அவர்   பாடிய   திருத்தொண்டர்த்தொகையாகும் .   63  நாயன்மார்கள்   ஈசனிடம்    கொண்ட   அளவிலா   பக்தி ,  அவர்கள்   ஆற்றிய   சாதனைகள்   அவர்களுக்காக   எம்பெருமான்   ஆடிய   அற்புத   திருவிளையாடல்கள்   இவைகளை  பாமர   மக்கள்   அறிந்து   உய்வதற்கு   காரணமாயிற்று .  ' தில்லைவாழ்   அந்தணர்தம்   அடியார்க்கு   அடியேன் '  என்று   ஈசன்   அடியெடுத்து   கொடுக்க    அத்தனை   பக்தர்களையும்   கண்டறிந்து    பட்டியலிட்டு   அத்தனை   பேருக்கும்   தான்   அடியேன்  என்று   தம்மை   அறிமுகப்படுத்திக்கொண்டு   அவர்   பாடிய   அப்பதிகமே   பிற்காலத்தில்   பெரிய   புராணமாக   விஸ்வரூபம்   எடுத்து   எல்லா   சிவாலயங்களிலும்   63 நாயன்மார்களும்   மூர்த்திகளாக   கொலு   வீற்றிருக்கிறார்கள் .       

No comments:

Post a Comment