இவ்வாறு தல யாத்திரையில் நாட்கள் கடந்தன . சிவபாதவிருதயர் யாத்திரை கிளம்புமுன் ஒரு யாகம் செய்ய எண்ணம் கொண்டிருந்தார். .அது இப்போது நினைவு வர சம்பந்தரிடம் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் பணமும் திரட்ட வேண்டுமென ஊர் திரும்ப யோசனை கேட்டார் . அதை கேட்ட பிள்ளை திருஆவடுதுறை ஐயனை வேண்டி 'இடரினும் தளரினும்' எனும் பதிகம் பாடி வேண்ட ஒரு சிவபூதம் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலிபீடத்தில் வைத்து விட்டு ஈசன் சொற்படி ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை பலிபீடத்தில் வைத்திருப்பதாக சொல்லி மறைந்தது . தந்தை நன்றி பெருக்குடன் அப்பணத்தை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினார் .
No comments:
Post a Comment