Tuesday, 11 December 2018

திருஆனைக்காவிலிருந்து   புறப்பட்டு  பல   க்ஷேத்திரங்களை   சேவித்துக்கொண்டு   சம்பந்தர்   நல்லூர்   வந்தார் .  சென்ற   இ டமெல்லாம்   சிவனடியார்கள்,   பக்தர்கள்   அவரை   வாழ்த்தி   வணங்க   அவர்   நல்லூர்   வந்து   சேர்ந்தார் .   திருவலஞ்சுழி   பழையாறு   முதலிய   தலங்களை   சேவித்து    பிறகு   பட்டிஸ்வரம்   கிளம்பினார் .  அப்போது   கோடை   காலமாதலால்   வெய்யில்   சுட்டெரித்தது .  அடியார்கள்   நடக்க   மிகுந்த   சிரமத்திற்கு   ஆளானார்கள் .  அதை   காண   சகிக்காத   ஈஸ்வரர்   சிவபூதத்தை   ஏவி   அவர்களுக்கு   நிழல்   தர   முத்து   பந்தலை   அளிக்குமாறு   கட்டளை   இட்டார் .     பூதமும்   பட்டிஸ்வரர்   கட்டளை   பேரில்   அவர்களுக்கு   வெய்யிலுக்கு   இதமாக   இப்பந்தலை   வழங்குவதாக   கூறிற்று .  சம்பந்தருக்கு   ஐயனின்   கருணை   மனநெகிழ்ச்சியையும்   ஆனந்தத்தையும்   அளித்தது .  அவர்   கருணையை   நெஞ்சார   உருகி பாடுகிறார்.  

No comments:

Post a Comment