திருஆனைக்காவிலிருந்து புறப்பட்டு பல க்ஷேத்திரங்களை சேவித்துக்கொண்டு சம்பந்தர் நல்லூர் வந்தார் . சென்ற இ டமெல்லாம் சிவனடியார்கள், பக்தர்கள் அவரை வாழ்த்தி வணங்க அவர் நல்லூர் வந்து சேர்ந்தார் . திருவலஞ்சுழி பழையாறு முதலிய தலங்களை சேவித்து பிறகு பட்டிஸ்வரம் கிளம்பினார் . அப்போது கோடை காலமாதலால் வெய்யில் சுட்டெரித்தது . அடியார்கள் நடக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் . அதை காண சகிக்காத ஈஸ்வரர் சிவபூதத்தை ஏவி அவர்களுக்கு நிழல் தர முத்து பந்தலை அளிக்குமாறு கட்டளை இட்டார் . பூதமும் பட்டிஸ்வரர் கட்டளை பேரில் அவர்களுக்கு வெய்யிலுக்கு இதமாக இப்பந்தலை வழங்குவதாக கூறிற்று . சம்பந்தருக்கு ஐயனின் கருணை மனநெகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளித்தது . அவர் கருணையை நெஞ்சார உருகி பாடுகிறார்.
No comments:
Post a Comment