Tuesday, 4 December 2018

மன்னரிடமிருந்து   விடை   பெற்றுக்கொண்டு   சம்பந்தர்  சில   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு    செங்குன்றம்   வந்தார் .   அங்கு   அவரை   தரிசிக்க   மக்கள்   திரண்டு   வந்தனர் .  அவரை   மகிழ்ச்சி   ஆரவாரத்துடன்  வரவேற்று   உபசரித்தனர் .  அங்கு   ஈசனை   வணங்கி   பாடி   மகிழ்ந்து   அங்கிருந்து   புறப்பட்டார் .   அப்போது   பனிக்காலம்    ஆதலால்   மக்கள்   குளிர் ,  சுரம் கண்டு   அவ திப்பட்டனர் .  சம்பந்தர்   மனம்   வருந்தி   ஐயனை   துதித்து   இந்த   அவதியை   நீக்க   வேண்டி   'அவ்வினைக்கிவ்வினை '  என்ற   பதிகம்   பாடி   ஐயன்   அருளால்   யாவரும்   நலம்   பெற   செய்தார் .    அங்கிருந்து   புறப்பட்டு   காவிரியின்   தென்கரையிலுள்ள   க்ஷேத்திரங்களை   சேவித்து   கொள்ள   விரும்பினார் .  திருச்சி  சுற்றி    ஆலயங்களை   சேவித்துக்கொண்டு   நிறைமாதப்பெண்   பிரசவ   வேதனையால்   துடிக்க   காவிரி   வெள்ளம்   காரணமாக   யாரும்   துணை   வரமுடியாத   நிலையில்   தன்னை   சரணமென்று   நம்பி   கதறிய   தாயின்   குரல்   கேட்டு   தானே   மருத்துவம்   பார்த்த   கருணை   கடலான   தாயுமானவரை   மலைக்கோட்டை   ஏறி   சேவித்து   கொண்டார் .

No comments:

Post a Comment