சம்பந்தர் பொற்கிழியுடன் தந்தையை சீர்காழி அனுப்பிவிட்டு அவர் ஆவடுதுறையில் சிலகாலம் தங்கி ஈசனை மனதார தொழுதார் . பிறகு பல தலங்களை சேவித்துக்கொண்டு நீலகண்ட யாழ்ப்பாணர் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் பிறந்த ஊரான தருமபுரம் சென்றார் . அங்கு அவ ருக்கு பலமான வரவேற்பு மக்களுக்கு சந்தோஷம் சொல்லில் அடங்காது . யாழில் பாணர் காழிப்பிள்ளை பதிகங்களை கேட்டு மெய்ம்மறந்தனர் . பாணர் யாழில் அவருடன் வாசிப்பதால் அவர் பாடல்கள் மேலும் இனிமை பெறுவதாக பேசிக்கொண்டனார் . அதை கேட்டு பாணர் மிக்க அதிர்ச்சி அடைந்தார் . ஈசன் பேரருளால் அன்றோ தனக்கு பெரும்பேறு கிட்டி இருக்கிறது . அப்படி இருக்க தன் யாழால் அவர் பாடல் மேன்மை பெறுவதாக தம் மக்கள் பேசுவது அவருக்கு பெரும் மனவருத்தத்தை அளித்தது . அவர் காழிப்பிள்ளையை வணங்கி தன் வருத்தத்தை விளக்கி தன் யாழுக்கு அப்பாற்பட்டதாக ஒரு பாடலை பாடுமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவ்வாறே 'மாதர் மடப்பிடியும் ' எனும் பதிகத்தை பாடினார் . அவர் மேலே மேலே பாட பாணரால் ஈடு கொடுக்க முடியாமல் தந்தி அறுந்தது. அவர் யாழை உடைக்க விழைகிறார் . சம்பந்தர் அவரை சமாதானம் செய்து யாழை அவரிடம் கொடுத்து அவர் பாடிய அப்பண்ணிற்கு 'யாழ்முரி 'என்று பெயர் சூட்டுகிறார் .
No comments:
Post a Comment