Tuesday, 20 September 2016

ஓலையில்  கண்ட  அந்த  ஒரு  வாக்கியம்  அவரை  உ லுக்கி  நிலை  குலைய  வைத்தது . அந்த  கணமே  அவர்  மனம்  சகல  ஆசைகளையும்  துறந்தது . வெறும்  கோவணத்துடன்  ஆண்டி  கோலத்தை  ஏற்றார் . தன்  செல்வம்  அனைத்தையும்   தன்  நண்பரான  சேந்தனார்  எனும்  சிவத்தொண்டரிடம்  எல்லா  செல்வத்தையும்  வறியவர்களுக்கு  தானமாக  வழங்கிட  பணித்தார் . சேந்தனாரை  சொல்லுகையில்  இதை  குறிப்பிட்டிருக்கிறேன் . அவரும்  அவ்வாறே  செய்தார் .திருவெண்காடர்  பட்டினத்து  அடிகள்  ஆகிறார் , அவருடைய  தமக்கை  இவ்வாறு  செல்வம்  பறிபோவதை  காண  பொறாமல்  அப்பத்தில்  விஷம் வைத்து  அதை  அடிகளாருக்கு  கொடுக்கிறாள் . அதை  அவர்  தமக்கையின்  வீட்டு  கூரையில்  எறிகிறார் . அவள்  வீடு  பற்றி  எரிகிறது ." தன்  வினை  தன்னை  சுடும் , ஓட்டப்பம்  வீட்டை  சுடும் " இது  அவரது  வாக்கியம் .

No comments:

Post a Comment