Wednesday, 14 September 2016

திருவெண்காடர்  16 வயதில்  சிவகலை  என்னும்  பெண்மணியை  மணம்  செய்து  கொண்டார் . வாணிபத்தில்  சிறந்த  முறையில்  செயலாற்றி  பெரும்  செல்வந்தனானார் . ஆனால்  மணமாகி  15 வருடங்கள்  கடந்தும்  பிள்ளை  பேறு  அடையவில்லை . சிவபெருமான்  தன்  விளையாட்டை  தொடங்குகிறார் . அதே  பகுதியில்  சிவனடியார்களுக்கு அன்னமிட்டே     மிக  வறிய  நிலை  அடைந்து  விட்ட  ஒரு  தம்பதியினருக்கு  உதவ  எண்ணம்  கொண்டார் . அவர்கள்  கனவில்  தோன்றி  அருகில்  ஓர் இடத்தில்  ஒரு  மரத்தை  குறிப்பிட்டு  அதனடியில்  ஒரு  ஆண்  குழந்தை  இருக்கும்  என்றும்  அக்குழந்தையை  திருவெண்காடரிடம்  சேர்ப்பித்து  அதன்  எடை  பொன்  பெறுமாறு  அறிவுறுத்துகிறார் . திருவெண்காடர்  கனவில்  தோன்றி  ஏழை தம்பதிகள்  ஒரு  குழந்தையை  கொடுப்பார்கள்  என்றும்  அவர்களுக்கு  அந்த  குழந்தை  எடை  பொன்  கொடுக்குமாறும்  அறிவுறுத்துகிறார் . அவர்  ஆணையிட்டது  போலவே  குழந்தையை  பெற்றுக்கொண்டு  பொன்  கொடுத்து  அனுப்புகிறார்  திருவெண்காடர் .

No comments:

Post a Comment