Saturday, 17 September 2016

திருவெண்காடர்  தம்பதியினர்  திருவிடைமருதூர்  ஆண்டவன்  அருளால்  கிடைத்த  அக்குழந்தைக்கு  மருதபிரான்  என்று  பெயரிட்டு  அருமையுடன்  வளர்க்கின்றனர் . அவன் வளர்ந்து   தக்க  வயது  வந்ததும்  அவனையும்  வணிகத்தில்  ஈடுபடுத்த  எண்ணுகிறார் . வெளிநாடுகளுடன்  வாணிபம்  செய்ய  கப்பலில்  சரக்கை  ஏற்றி  அவனை  அனுப்புகிறார் . மகன்  கப்பலுடன்  திரும்புகிறான் . ஆனால்     தந்தைக்கு  மிக்க  ஏமாற்றம்  அளிக்கும்     வகையில் கப்பலில்  விரட்டியும்  வைக்கோலும்  இருப்பதைக்  கண்டு  அதிர்ச்சி  அடைந்த  திருவெண்காடர்  மகனை  அடித்து  அறையில்  வைத்து  புட்டுகிறார் . ஆனால்  மகன்  தாயிடம்  ஒரு  பெட்டியை  கொடுத்துவிட்டு  மறைந்து   விடுகிறான் . பூட்டி  இருந்த  அறையில்  இருந்து  மகன்  காணாமல்  போனது  கண்டு  திடுக்கிடுகிறார் .  மனைவியிடம்  அவன்  கொடுத்த  பெட்டியை  திறந்து  பார்க்கிறார் . அதில்  ஒரு காதற்ற  ஊசியும்  ஒரு ஓலையும்  இருக்க கண்டார் . அந்த  ஓலையில்  'காதற்ற  ஊசியும்  வாராது  காண்  கடை  வழிக்கே ' என்று  எழுத  பட்டிருந்தது . மேலும்  அவன்  கொண்டுவந்த  விரட்டி  களுக்குள்  வைரமும்  விலை  உயர்ந்த  ரத்தினங்களும்  இருக்கக்  கண்டார் . மகனாக  வந்தது  ஈசனே  என்பதை  அறிந்து  கொண்டார் 

No comments:

Post a Comment