அடுத்து 826 முதல் 1035 வரை உள்ள பாடல்களை பாடியவர் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்ட திருவெண்காடர் . பட்டினத்தார் என்று சொன்னாலே நமக்கு '' காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே " என்ற வாக்கியம் நம் மனதில் தோன்றும் . அந்த ஒரு வாக்கியத்தால் மனம் மாறி பெரும் சித்தரான மகான் இவர் . பொருள்களின் நிலையாமை யை ஒரே வரியில் உணர்த்தும் இந்த வாக்கியத்தினால் மனம் மாறியவர் . காவிரி பூம்பட்டினத்தில் பெரும் வணிகரான சிவநேசன் என்பவருக்கும் அவர் மனைவி ஞானக்கலை என்பவருக்கும் திருவெண்காட்டு ஈசன் அருளால் பிறந்தவர் திருவெண்காடர் . அக்குடும்பமே சிவத்தொண்டர்களை பணிந்து அவர்களுக்கு அன்னமிட்டு அதில் மகிழ்ந்து வாழ்ந்தனர் . திருவெண்காடர் 5 வயதாக இருந்தபோதே துரதிஷ்டவசமாக தந்தையை இழந்தனர் .
No comments:
Post a Comment