Thursday, 22 September 2016

இவ்வாறு  எல்லாவற்றையும்  துறந்த  பட்டினத்தார்  சிவ தலங்களையெல்லாம்  சேவிக்க  புறப்பட்டு  விட்டார் .ஈசன்  மீது  நிறைய  பாடல்கள் பாடினார்   ..சிவ  பெருமானை  தரிசித்து  ஆனந்தம்  அடைந்தார் . அவர்  பாடல்கள்  எளிய  தமிழிலும்  உருக்கமான  பொருள்  கொண்டதாகவும்  இருந்தது . வாழ்வின்  நிலையாமை.யை  எளிமையாகவும் பொருள்செறிந்ததாகவும்     சித்தரிக்கிறார் . பெரும்  சித்தராக  திகழ்ந்தார் . இவ்வாறு  திரிந்து  கொண்டிருக்கையில்  அவர்  தாயின்  அந்திம  காலம்  நெருங்குவதை   உணர்கிறார் . அவர்  தாய்க்கு  அவள்  ஈமச்சடங்குகளை  செய்வதாக  வாக்களித்திருந்த்தால்  அங்கு  விரைகிறார் . விறகுகளை  நிக்கி விட்டு  வாழை  மரத்தையும்  இலைகளையும்  வைத்து  எரியூட்டுகிறார் . அப்போது  அவர் பாடிய  ' ஐயிரண்டு  திங்களாய்  அங்கமெலாம்  நொந்து '  எனும்  பாட்டு  உருக்கமானது  .  அதன்  பின்  அவர்  சீர்காழி , சிதம்பரம்  போன்ற  தலங்களை  தரிசித்து  கொண்டு  திருவொற்றியூர்  வந்து  சேர்ந்தார் . அங்கு  ஒரு  நாள்  சிறுவர்களுடன்  ஆடி  தன்னை  மணலால் மூட  செய்கிறார் . அங்கு  அதிசயம்  நிகழ்ந்தது . அவர்  இருந்த  இடத்தில்  அவரில்லை  ஆனால்  ஒரு   சிவலிங்கம்  இருந்ததாக  கூறப்படுகிறது ..

No comments:

Post a Comment