இவ்வாறு எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தார் சிவ தலங்களையெல்லாம் சேவிக்க புறப்பட்டு விட்டார் .ஈசன் மீது நிறைய பாடல்கள் பாடினார் ..சிவ பெருமானை தரிசித்து ஆனந்தம் அடைந்தார் . அவர் பாடல்கள் எளிய தமிழிலும் உருக்கமான பொருள் கொண்டதாகவும் இருந்தது . வாழ்வின் நிலையாமை.யை எளிமையாகவும் பொருள்செறிந்ததாகவும் சித்தரிக்கிறார் . பெரும் சித்தராக திகழ்ந்தார் . இவ்வாறு திரிந்து கொண்டிருக்கையில் அவர் தாயின் அந்திம காலம் நெருங்குவதை உணர்கிறார் . அவர் தாய்க்கு அவள் ஈமச்சடங்குகளை செய்வதாக வாக்களித்திருந்த்தால் அங்கு விரைகிறார் . விறகுகளை நிக்கி விட்டு வாழை மரத்தையும் இலைகளையும் வைத்து எரியூட்டுகிறார் . அப்போது அவர் பாடிய ' ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து ' எனும் பாட்டு உருக்கமானது . அதன் பின் அவர் சீர்காழி , சிதம்பரம் போன்ற தலங்களை தரிசித்து கொண்டு திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் . அங்கு ஒரு நாள் சிறுவர்களுடன் ஆடி தன்னை மணலால் மூட செய்கிறார் . அங்கு அதிசயம் நிகழ்ந்தது . அவர் இருந்த இடத்தில் அவரில்லை ஆனால் ஒரு சிவலிங்கம் இருந்ததாக கூறப்படுகிறது ..
No comments:
Post a Comment