அடுத்து 256 வரை உள்ள பாடல்களை பாடியவர் திருவாலியமுதனார் . அவரை பற்றியும் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை . அவர் வேதம் ஓதுகிற வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர் . ஆயினும் அவர் அம்பலகூத்தனின் மேல் அதிகமான பக்தி உடையவராக இருந்தார் . அவருடைய முன்னோர்கள் சீர்காழி அருகில் உள்ள திருவாலி எனும் க்ஷேத்திரத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அமுதனாரிடம் மிகுந்த பக்தி உடையவர்கள் . ஆதலால் இவருக்கு வாலியமுதனார் என்று பெயரிட்டனர் . அவர் தன்னை மயிலையார் மன்னவன் என்று குறிப்பிட்டிருக்கிறார் . ஆதலால் அவர் மயிலையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது . சிலர் மயிலாடுதுறை என்றும் சொல்வர் . அவர் மனம் விஷ்ணுவை நாடாமல் தில்லை கூத்தனை நாடியது . அம்பலவாணனிடம் மிகுந்த பக்தி கொண்டு அவர்மேல் பாடல்கள் பாடினார் . அவை திருவிசைபாவில் இடம் பெருகின்றன .
No comments:
Post a Comment