Tuesday, 10 November 2015

valiyamuthanar

அடுத்து  256 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்  திருவாலியமுதனார் . அவரை  பற்றியும்  அதிக  தகவல்கள்  கிடைக்கவில்லை . அவர்  வேதம்  ஓதுகிற  வைஷ்ணவ  குடும்பத்தை  சேர்ந்தவர் . ஆயினும்  அவர்  அம்பலகூத்தனின்  மேல்  அதிகமான  பக்தி  உடையவராக  இருந்தார் . அவருடைய  முன்னோர்கள்  சீர்காழி  அருகில்  உள்ள  திருவாலி  எனும்  க்ஷேத்திரத்தில்  எழுந்தருளி  இருக்கும்  பெருமாள்  அமுதனாரிடம்  மிகுந்த  பக்தி  உடையவர்கள் . ஆதலால்  இவருக்கு  வாலியமுதனார்  என்று  பெயரிட்டனர் . அவர் தன்னை  மயிலையார் மன்னவன்  என்று  குறிப்பிட்டிருக்கிறார் . ஆதலால்  அவர்  மயிலையை  சேர்ந்தவர்   என்று  கூறப்படுகிறது . சிலர் மயிலாடுதுறை என்றும்  சொல்வர் . அவர்  மனம்  விஷ்ணுவை  நாடாமல்  தில்லை  கூத்தனை  நாடியது . அம்பலவாணனிடம்  மிகுந்த  பக்தி  கொண்டு  அவர்மேல்  பாடல்கள்  பாடினார் . அவை  திருவிசைபாவில்  இடம்  பெருகின்றன .

No comments:

Post a Comment