257 முதல் 278 பாட்டுகளை பாடியவர் புஷோத்தம நம்பி ஆவர் . அவரை பற்றியும் அதிகமாக ஒன்றும் தெரியவில்லை .விஷ்ணுவின் நாமங்களில் ஒன்றான புருஷோத்தமன் என்கிற நாமம் கொண்டதால் அவரு ம் வைணவர் என்று தெரிகிறது . வேத விற்பன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது . அவரே தன்னை பற்றி மாசிலா மறைபால ஒதுனவன் என்று கூறிக்கொள்வதால் அவரும் வேதவிற்பன்னர் என்று தெரிகிறது . அவரும் மிக்க படித்தவர் . நிறைய பாடல்கள் புனைந்துள்ளார் . அவர் 11 நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது . அவர் வைஷ்ணவர் ஆயினும் அவர் மனம் தில்லை கூத்தனை நாடியே சென்றது . அவர் தில்லையே இருப்பிடமாக கொண்டு ஆடலரசனை பாடியே வாழ்ந்தார் . அவர் பாடிய கடைசி திருவிசைப்பா ,
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னை புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலை பத்தும் பயின்றாடி பாடினார்
எண்ணுதலை பட்டாங்கு இனிதா இருப்பாரே |
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னை புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலை பத்தும் பயின்றாடி பாடினார்
எண்ணுதலை பட்டாங்கு இனிதா இருப்பாரே |
No comments:
Post a Comment