Tuesday, 17 November 2015

purushoththama

257 முதல்  278 பாட்டுகளை  பாடியவர்  புஷோத்தம நம்பி  ஆவர் .  அவரை  பற்றியும்  அதிகமாக  ஒன்றும்  தெரியவில்லை .விஷ்ணுவின்  நாமங்களில்  ஒன்றான  புருஷோத்தமன்  என்கிற  நாமம்  கொண்டதால்  அவரு ம்  வைணவர்  என்று  தெரிகிறது . வேத  விற்பன்னர்  குடும்பத்தை  சேர்ந்தவர்  என்று  தெரிகிறது . அவரே  தன்னை  பற்றி  மாசிலா  மறைபால  ஒதுனவன்  என்று  கூறிக்கொள்வதால்  அவரும்  வேதவிற்பன்னர்  என்று  தெரிகிறது . அவரும்  மிக்க  படித்தவர் . நிறைய  பாடல்கள்  புனைந்துள்ளார் . அவர்  11 நூற்றாண்டில்  வாழ்ந்தவர்  என்று கூறப்படுகிறது . அவர் வைஷ்ணவர்  ஆயினும்  அவர்  மனம்  தில்லை  கூத்தனை  நாடியே  சென்றது . அவர்  தில்லையே  இருப்பிடமாக  கொண்டு  ஆடலரசனை  பாடியே  வாழ்ந்தார் . அவர் பாடிய கடைசி  திருவிசைப்பா ,
ஒண்ணுதலி  காரணமா  உம்பர்  தொழுதேத்தும்
கண்ணுதலான்  தன்னை  புருடோத்தமன்  சொன்ன
பண்ணுதலை  பத்தும்  பயின்றாடி  பாடினார்
எண்ணுதலை  பட்டாங்கு  இனிதா  இருப்பாரே | 

No comments:

Post a Comment