Friday, 7 June 2019

கடற்காழி   கணநாதன்   அடியார்க்கு   அடியேன் |

 சீர்காழியில்   அந்தணர்   குலத்தில்   பிறந்த   ஒரு   சிறந்த   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  பெயர்   கணநாதர் .  சிவத்தொண்டே      வாழ்வு   லட்சியமாக   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  தம்மை   நாடி   வருபவர்களையும்   அன்புடன்   வரவேற்று   அவர்களையும்   அத்தொண்டில்    ஈடுபடுத்துவார் .   எல்லோரும்   சேர்ந்து   நந்தவனம்   அமைத்து    பூச்செடிகள்   வளர்த்து   தினம்   பூமாலைகள்    ஐயனுக்கு   சமர்ப்பித்து   இன்பம்   எய்தினார் .   திருமஞ்சனத்திற்கு   நீர்    கொண்டு   வருவது .  தோட்டம்   சுத்தம்   செய்வது  கோயில்  ,  பிரகாரம்   மெழுகி   கோலம்   ,போடுவது    விளக்கு    ஏற்றுவது    ஈசனுக்கு   மனம்   குளிர   பக்தி   பாடல்கள்    பாடுவது   போன்று       பல   நற்பணிகளை    செய்து   வந்தனர் .   அவரவர்களுக்கு   பிடித்தமான   பணிகளில்       எல்லோருக்கும்      பயிற்சி      அளிப்பார் .     அவருக்கு   சம்பந்த  பெருமானிடம்   அளவற்ற    பக்தி .  அவரை   தினமும்   சந்தித்து   வணங்கி வந்தார் .அவருடைய   அருந்தொண்டுகளால்    மகிழ்ந்த   எம்பிரான்   அவருக்கு   முக்தி    கொடுத்து    அவரை  கணங்களுக்கு   அதிபர்   ஆக்கினார் .   

No comments:

Post a Comment