Wednesday, 19 June 2019

அவர்   நல்லாட்சியில்   மக்கள்   மகிழ்ந்து   அவரை   போற்றி   கொண்டாடினர் . அவர்   முடிசூடா    மன்னராக   திகழ்ந்தார் .  அவருக்கு   தில்லை   கூத்தனை   சேவிக்க  பேரவா   எழுந்தது .  உடனே   அவர்   கிளம்பி   தில்லை   சென்றார் . அவருக்கு   அங்கு   சென்று   ஆடவல்லானை   சேவித்து   கொண்ட   பிறகு   பொன்னம்பலத்திலுள்ள   முடியை   தன்   தலையில்   சூடிக்கொள்ள   வேண்டுமென்ற   ஆவல்     எழுந்தது  .   தில்லை   மூவாயிரத்தவர்களிடம்      அவர்களிடம்   தம்   ஆவலை     தெரிவித்தார் .   அவர்கள்   திட்டமாக   மறுத்து   சோழ   மன்னர்   ஒருவருக்கே   அந்த   உரிமை   என்று   கூறினர் .  கூ ற்றனார்    மனமுடைந்து   போனார் .   ஈசனை  வருத்தத்துடன்   வணங்கி   தம்   குறையை   முறையிட்டார் .  தில்லைவாழ்   அந்தணர்கள்   தாம்    மறுத்ததால்   என்ன   நேருமோ   என்று   பயந்து   தலை  மறைவாகி   விட்டனர் .   கூற்றனார்     எம்பெருமானிடம்   சரணடைந்தார் .  ஈசன்   மனமிரங்கி   அன்றிரவு   அவர்   கனவில்   தோன்றி   அவர்   தலையில்   தன்    திருவடிகளை   பதித்து   சென்றார் .  அடியாருக்கு   தேகம்   புல்லரித்து .  சந்தோஷம்   தாளவில்லை .  அவர்   பக்தி   மேலும்   பெருகிற்று .   அவ்வாறே   சிலகாலம்   வாழ்ந்து   சிவபதம்   அடைந்தார் .       

No comments:

Post a Comment