Monday, 7 November 2016

  சேக்கிழார்  இவ்வரிய  நூலை  எழுதவும்  அரங்கேற்றவும்  தில்லையே  சிறந்த  இடமாக  தேர்ந்தெடுக்கிறார் . அரசனும்  சம்மதம்  அளிக்கிறார் . எழுதும்  முன்  எல்லா  நாயன்மார்களையும்  பற்றி  அறிந்து  கொள்ள  அவர்கள்  எல்லோரும்  வாழ்ந்த   இடங்களுக்கு  சென்று  கிடைத்த  தகவல்களை  தெரிந்து  கொண்டார் . அதன்  பிறகு  அவர்  தில்லையை  அடைந்து  நடராஜப்பெருமானை  மனமுருக  தியானித்து  கொண்டார் .அவர்  எவ்வாறு  தொடங்கலாம்  என  ஆழ்ந்து  சிந்திக்க  தொடங்கினார் . அன்பே  உருவான  ஈசன்  அவருக்கு ''உலகெலாம்  உணர்ந்து '' என்று  அடியெடுத்து  கொடுக்கிறார் . மெய்சிலிர்த்த  சேக்கிழார்  ஈசனின்  கருணையை  வியந்து  இந்நூலை  எழுத  தொடங்குகிறார் .

No comments:

Post a Comment