சேக்கிழார் இவ்வரிய நூலை எழுதவும் அரங்கேற்றவும் தில்லையே சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கிறார் . அரசனும் சம்மதம் அளிக்கிறார் . எழுதும் முன் எல்லா நாயன்மார்களையும் பற்றி அறிந்து கொள்ள அவர்கள் எல்லோரும் வாழ்ந்த இடங்களுக்கு சென்று கிடைத்த தகவல்களை தெரிந்து கொண்டார் . அதன் பிறகு அவர் தில்லையை அடைந்து நடராஜப்பெருமானை மனமுருக தியானித்து கொண்டார் .அவர் எவ்வாறு தொடங்கலாம் என ஆழ்ந்து சிந்திக்க தொடங்கினார் . அன்பே உருவான ஈசன் அவருக்கு ''உலகெலாம் உணர்ந்து '' என்று அடியெடுத்து கொடுக்கிறார் . மெய்சிலிர்த்த சேக்கிழார் ஈசனின் கருணையை வியந்து இந்நூலை எழுத தொடங்குகிறார் .
No comments:
Post a Comment