Friday, 4 November 2016

இவ்வாறு  அருள்மொழி  அறிவில்  எல்லோரும்  அதிசயிக்கும்  விதம்  மிக சிறந்து  விளங்கினான் .அப்போது  சோழ  நாட்டின்  அரசனாக  ஆட்சி  செய்தவர்  இரண்டாம்  குலோத்துங்கன்  எனும்  அநபாய சோழன் . அவன்  மூன்று  கேள்விகளை  கேட்டு  பதில்  வேண்டி தெரிந்தவர்கள்  அவைக்கு  வந்து  கூறுமாறு  அறிவித்தான் . அருண்மொழியின்  தந்தை  தன்  மகன்  விடை  கூறுவான்  என்று  அவனை  அரச அவைக்கு  அழைத்து  சென்றார் . அங்கு  அவையோர்  வியக்கும்  வகையில்  திருக்குறளை  மையமாக  வைத்தே  எல்லா  வினாக்களுக்கும்  தெளிவாக  பதில்  அளித்து  அவையோரை  அசர  வைத்தான் . அரசன்  அவன்  அறிவை  கண்டு  மெய் சிலிர்த்தான் .

No comments:

Post a Comment