63 நாயன்மார் வரலாறு காணும்போது ஈசனின் அளவிலா அன்பு நம்மை வியக்க வைக்க வைக்கிறது . அறுபத்து மூவரின் வரலாறு காணும்பொது ஒரு பெரிய உண்மை அதிசயிக்க வைக்கிறது . எத்தனை வேறுபாடுகள் காணப்படுகின்றன . ஏழை , பணக்காரன் , அரசன் ,ஆண்டி , படித்தவன் படிக்காதவன் எல்லோரும் வேறுபாடின்றி சிவ பெருமானின் திருவடிகளை சேர்ந்தவர்கள் . அவனுடைய கருணைதான் என்னே ! சிலர் அவனை உளமாற துதித்து பாடி மகிழ்ந்தனர் . அவனையன்றி வேறு எண்ணமே இல்லாமல் வாழ்ந்தனர் . சிலர் உழவார பணி செய்து மகிழ்ந்தனர் . ஆலயங்கள் எழுப்பியவர்களும் உண்டு .சிலர் ஒரு கொள்கைக்காக எத்தனை பெரிய தியாகத்தையும் செய்ய துணிந்தனர் . ஈசன் எல்லோரையும் ஒரே கண்ணோத்துடன் அருளி ஏற்றுக்கொண்டான்
No comments:
Post a Comment