Saturday, 5 November 2016

அருண்மொழியின்  தேர்ந்த அறிவில்  மயங்கிய  மன்னன்  உடனே  அருண்மொழியை  தன்  பிரதான  மந்திரி  ஆக்கிக்கொண்டான் . உத்தம சோழ  பல்லவன்  என்கிற  பட்ட  பெயரையும்  சூட்டினான் . முதல் மந்திரி  சேக்கிழார்  ஆனார் .  நல்ல  முறையாக  ஆட்சி  நடந்தது  . ஆனால் துரதிஷ்ட வசமாக  மன்னன்  சீவகசிந்தாமணி  போன்ற  சமண  நூல்களில்  மயங்கி  சமணர்கள்  பக்கம்  சாய  தொடங்கினார் . அரசவை  பெரியோர்கள்  பெரிதும்  மனம்  வருந்தி சேக்கிழாரிடம்  முறையிட்டனர் . இதனை  கேட்ட  சேக்கிழார்  மிக  வருந்தி  அவரை  சிவபெருமான்  பெருமையை   உணர  வைக்க  அவருக்கு  கண்ணப்ப, நந்தனார்  போன்ற  சிறந்த  சிவபக்தர்கள்  வரலாறை  எடுத்து  சொல்லி  சிவபெருமான்  அவர்களை  ஆட்கொண்ட  பெருமையையும்  எடுத்து  கூறி  மன்னன்   மனத்தை  மாற்றுகிறார் . அப்பக்தர்கள்  வரலாறை  கேட்ட   மன்னன்  அதில்  பெரிதும்   ஈடுபாடு  ஏற்ப்பட்டவராய்  63 நாயன்மார்கள் வரலாற்றையும்  காவியமாக  எழுதுமாறு  சேக்கிழாரை  மனமுருகி   வேண்டுகிறார் . முதலில்  தயங்கிய  சேக்கிழார்   ஈசன்   ஆணையாக  அதை  ஏற்று  அதை  உருவாக்க   அவகாசம்  தேவை   என்பதையும்   விண்ணப்பிக்கிறார் . அரசனும்  சம்மதிக்கிறான் . இவ்வாறு  பெரிய  புராணம்  நமக்கு  கிடைக்கப்பெற்றது .

No comments:

Post a Comment