அருண்மொழியின் தேர்ந்த அறிவில் மயங்கிய மன்னன் உடனே அருண்மொழியை தன் பிரதான மந்திரி ஆக்கிக்கொண்டான் . உத்தம சோழ பல்லவன் என்கிற பட்ட பெயரையும் சூட்டினான் . முதல் மந்திரி சேக்கிழார் ஆனார் . நல்ல முறையாக ஆட்சி நடந்தது . ஆனால் துரதிஷ்ட வசமாக மன்னன் சீவகசிந்தாமணி போன்ற சமண நூல்களில் மயங்கி சமணர்கள் பக்கம் சாய தொடங்கினார் . அரசவை பெரியோர்கள் பெரிதும் மனம் வருந்தி சேக்கிழாரிடம் முறையிட்டனர் . இதனை கேட்ட சேக்கிழார் மிக வருந்தி அவரை சிவபெருமான் பெருமையை உணர வைக்க அவருக்கு கண்ணப்ப, நந்தனார் போன்ற சிறந்த சிவபக்தர்கள் வரலாறை எடுத்து சொல்லி சிவபெருமான் அவர்களை ஆட்கொண்ட பெருமையையும் எடுத்து கூறி மன்னன் மனத்தை மாற்றுகிறார் . அப்பக்தர்கள் வரலாறை கேட்ட மன்னன் அதில் பெரிதும் ஈடுபாடு ஏற்ப்பட்டவராய் 63 நாயன்மார்கள் வரலாற்றையும் காவியமாக எழுதுமாறு சேக்கிழாரை மனமுருகி வேண்டுகிறார் . முதலில் தயங்கிய சேக்கிழார் ஈசன் ஆணையாக அதை ஏற்று அதை உருவாக்க அவகாசம் தேவை என்பதையும் விண்ணப்பிக்கிறார் . அரசனும் சம்மதிக்கிறான் . இவ்வாறு பெரிய புராணம் நமக்கு கிடைக்கப்பெற்றது .
No comments:
Post a Comment