உலகெலாம் உணர்ந்தோதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் |
இதுவே அண்ணல் அடியெடுத்து கொடுக்க சேக்கிழார பாடிய பாடல் , தொடர்ந்து ஈசனை துதித்து அவர் எல்லையிலா பெருமைகளை பாடுகிறார் . 4286 பாடல்களை கொண்ட பெரியபுராணத்தை இவ்வாறு தொடங்குகிறார் . பெருமைமிக்க 63 நாயன்மார்களின் வாழ்க்கையை மிகுந்த பக்தி சிரத்தையுடன் எழுத தொடங்குகிறார் . சுந்தரரால் மிகுந்த பக்தியுடன் ''அடியார்க்கு அடியேன் '' என்று தன்னை தாழ்மையுடன் உணர்த்திக்கொண்டு ஒவ்வொரு வரியில் அறிமுக படுத்தப்பட்டு பின்பு நம்பியாண்டார் நம்பியால் அவர்கள் பெருமை ஒவ்வொரு பாடலால் பெருமை படுத்தப்பட்ட நாயன்மார்களின் வரலாறை விரிவாக பாடி அவர்கள் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறார் சேக்கிழார்.
No comments:
Post a Comment