Monday, 9 September 2019

மன்னியசீர்   மறை   நாவல்   நின்றவூர்   பூசல் | 

தொண்டை   நாட்டில்   உள்ளது   திருநின்றவூர் .  அவ்வூரில்   பூசலார்   என்று   ஒரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  சிறந்த   சிவபக்தர் .  வேதசாஸ்திரங்களில்   மிக்க   தேர்ச்சி   பெற்றவர் .   அதையே   ஜீவனோபாயத்திற்கும்   செய்து   வருபவர் .  சிவனடியார்களிடம்   பேரன்பு   கொண்டவர் .  அவர்களுக்கு   தன்னால்   இயன்ற   தொண்டுகளை   செய்வதை    லட்சியமாக   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  வேத   சாஸ்திரங்களை   போதித்தும்   வந்தார் .
      அந்த   ஊரில்   எம்பெருமான்   கோயில்   இல்லாததால்   பக்தர்கள்   பக்கத்து   ஊர்   சென்று   ஐயனை   சேவிக்க   வேண்டி     இருந்தது .   இது   பூசலாருக்கு    பெரும்   மன   வருத்தம்   அளித்தது .   திருநின்றவூரில்   ஒரு   கோயில்      கட்ட   வேண்டுமென்ற   பேரவா   அவர்   மனதில்  எழுந்தது .

No comments:

Post a Comment