கோட்புலியார் மலைபோல் தானியம் குவித்து வைத்து எம்பெருமானுக்கு திருவமுது செய்வதற்கே வைத்திருப்பார் . மற்றும் சிவ பெருமானுக்கு பலவிதமாக தொண்டு புரிவதை தனது பாக்கியமாக கருதி செய்து வந்தார் . துரதிஷ்ட வசமாக போர் மூண்டது . சேனை தலைவனாக பொறுப்புள்ள அவர் போருக்கு செல்ல நேர்ந்தது அவர் தன் உறவினர்களை அழைத்து தான் திரும்ப வரும்வரை அந்த தானிய கிடங்கை காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார் . நம்பிக்கையான ஒருவரை காவலுக்கு அமர்த்தி விட்டு தம் உறவினர்களை தானியங்களை பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் . அப்போது அவர் அவை ஐயனுக்கு திருவமுது செய்வதற்கே வைக்கப்பட்டது . ஆகையால் ஐயன் மீது ஆணையாக ஒரு பிடி கூட வேறு உபயோகத்துற்கு எடுக்க கூடாது என்று ஆணை பிறப்பித்தார் .
No comments:
Post a Comment