Wednesday, 4 September 2019

கோட்புலியார்   மலைபோல்   தானியம்   குவித்து வைத்து   எம்பெருமானுக்கு   திருவமுது   செய்வதற்கே   வைத்திருப்பார் .  மற்றும்     சிவ   பெருமானுக்கு   பலவிதமாக      தொண்டு   புரிவதை   தனது     பாக்கியமாக   கருதி   செய்து   வந்தார் .    துரதிஷ்ட வசமாக   போர்   மூண்டது .  சேனை   தலைவனாக   பொறுப்புள்ள   அவர்   போருக்கு   செல்ல   நேர்ந்தது     அவர்  தன்   உறவினர்களை   அழைத்து   தான்   திரும்ப   வரும்வரை   அந்த   தானிய   கிடங்கை   காப்பாற்றும்   பொறுப்பை    ஒப்படைக்க   முடிவு   செய்தார் .     நம்பிக்கையான   ஒருவரை   காவலுக்கு   அமர்த்தி   விட்டு   தம்   உறவினர்களை   தானியங்களை   பார்த்துக்   கொள்ளும்படி   கேட்டுக்கொண்டார் .   அப்போது   அவர்   அவை   ஐயனுக்கு   திருவமுது   செய்வதற்கே   வைக்கப்பட்டது .  ஆகையால்   ஐயன்   மீது   ஆணையாக   ஒரு   பிடி  கூட   வேறு   உபயோகத்துற்கு   எடுக்க     கூடாது   என்று   ஆணை   பிறப்பித்தார் .

No comments:

Post a Comment