பூசலார் மனம் ஆனந்தம் அடைந்தது அவர் நினைக்க அமைத்த ஆலயம் அவர் விரும்பிய வண்ணம் எழும்ப ஆரம்பித்தது . அவர் பக்கத்திலேயே இருந்து ஒரு சிறு தவறும் ஏற்படாமல் கவனித்து பார்த்து பார்த்து கட்ட வைத்து பெருமிதம் அடைந்தார் . மெல்ல ஆலயம் எழும்பியது . அவர் மனம் விரும்பிய விதமாக ஆலயம் உருவானது . ஸ்தபதிகள் வெகுவாக பாடுபட்டு எம்பெருமான் திருமேனியையும் அம்பாள் திருமேனியையும் பொலிவுற அமைத்து அவைகளை பீடங்களில் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்தனர் . இனி சாஸ்திரப்படி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தான் . பூசலார் மனம் மகிழ்ச்சி ஒருபுறம் கும்பாபிஷேகம் முறைப்படி எம்பெருமான் மனம் குளிர நடக்க வேண்டுமே என்ற பதட்டம் ஒரு புறம் என மனம் அலைபாய தூக்கமின்றி இரவு கழிந்தது .
No comments:
Post a Comment