Sunday, 15 September 2019

பூசலார்   மனம்   ஆனந்தம்   அடைந்தது அவர்   நினைக்க   அமைத்த   ஆலயம்   அவர்   விரும்பிய   வண்ணம்   எழும்ப   ஆரம்பித்தது .  அவர்   பக்கத்திலேயே   இருந்து   ஒரு   சிறு    தவறும்   ஏற்படாமல்   கவனித்து   பார்த்து   பார்த்து   கட்ட   வைத்து   பெருமிதம்   அடைந்தார் .  மெல்ல   ஆலயம்   எழும்பியது .  அவர்  மனம்  விரும்பிய   விதமாக     ஆலயம்   உருவானது .   ஸ்தபதிகள்   வெகுவாக   பாடுபட்டு   எம்பெருமான்   திருமேனியையும்   அம்பாள்   திருமேனியையும்   பொலிவுற  அமைத்து    அவைகளை   பீடங்களில்   ஆகம   விதிப்படி   பிரதிஷ்டை   செய்தனர் .  இனி   சாஸ்திரப்படி   கும்பாபிஷேகம்   செய்ய   வேண்டியது   தான் .  பூசலார்   மனம்   மகிழ்ச்சி   ஒருபுறம்   கும்பாபிஷேகம்   முறைப்படி   எம்பெருமான்   மனம்   குளிர   நடக்க   வேண்டுமே   என்ற     பதட்டம்   ஒரு   புறம்   என   மனம்   அலைபாய   தூக்கமின்றி   இரவு   கழிந்தது .  

No comments:

Post a Comment