Thursday, 12 September 2019

பூசலார்   ஆலயம்   கட்டும்   தம்   எண்ணத்தில்   உறுதியாக   இருந்தார் .  எங்கெல்லாமோ   அலைந்து   நிதி    திரட்ட   முனைந்தார் .  ஆனால்   அவர்   முயற்சி   பயனளிப்பதாக   தோன்றவில்லை   .  நாள்   செல்ல   செல்ல   அவரை   எல்லோரும்   பைத்தியமாக   எண்ணி   ஒதுக்க   ஆரம்பித்தனர் .  வருடங்கள்   கடந்தன .  அவர்   எண்ணத்தில்   கொழுந்து   விட்டு   எறியும்   ஆவல்   தணிவதாக   இல்லை .  அவர்   கனவு   நிறைவேறுவதாக   இல்லை .  அது   சாத்தியம்   என்ற   நம்பிக்கையும்    குறைந்தது .    ஆனாலும்   அவருடைய   அந்த   கனவு   அப்படியே   நீ ரு   ஊற்றி   நெருப்பு    அணைவது   போல்   போவதை   அவர்   விரும்பவில்லை .     பொருள்   சேர்த்து   பெரும்   ஆலயம்   அமைத்து   புற    கண்ணால்   காண்பது   சாத்தியமாகாது   என்ற   எண்ணம்   மனதை   உலுக்கியது .   ஆனாலும்   அவர்   தளரவில்லை .   தன்   உள்ளத்தில்   பெரும்  ஆலயம்     அமைத்து    தம்  மனதார    ஐயனை   அக   கண்ணால்    மனம்    குளிர   சேவித்து      மகிழ   முடிவு    செய்தார் .   

No comments:

Post a Comment