திருவதிகையை அடைந்த நாவுக்கரசர் அந்த ஈசனை உளமுருக துதித்து அவர் மீது பதிகங்கள் பாடி நன்றி பெருக்கால் கண்ணீர் சொரிந்தார் . மக்களும் மெய்மறந்து அதை ரசித்தனர் . இதனிடையே பாதிரிபுலியூரில் பத்திரமாக கரையேறி அதிகை சென்று தம் உழவாரப்பணியில் ஈடுபட்டார் என்ற செய்தி அரசனுக்கு எட்டியது . நாவுக்கரசரின் பெருமை உணர்ந்தார் . அப்போதே அவருக்கு சமணர்கள் மீதிருந்த பற்று அறுந்தது . தான் அவருக்கு இழைத்த கொடுமைகளை எண்ணி வெட்கி மிக வருத்தம் அடைந்தார் . அவர் காலில் விழுந்து மன்னிப்பு கோர அதிகை விரைந்தார் . அங்கு நாவுக்கரசர் சைவத்தின் பெருமையை உணர்த்த ஐயன் ஆடிய திருவிளையாடல் அதில் அரசன் ஒரு கருவியே என்று கூறி சமாதானம் செய்தார் . அரசன் அவர் காலடியில் விழுந்து வணங்கினார் . பல்லவ அரசன் சமணர்களை அடித்து துரத்தி விட்டு அந்த பள்ளிகளையும் இடித்து தள்ளினார் . நிறைய சிவாலயங்களை எழுப்ப துவங்கினார் .
No comments:
Post a Comment