Tuesday, 24 April 2018

அப்பூதி   அடிகள்   மகிழ்ச்சிக்கு   எல்லையே   இல்லை .  மகனை   உயிர்ப்பித்த   அப்பருடைய   பெருமை   அவரை    அவர்   மீது   கொண்டிருந்த   பக்தியை   இன்னும்   அதிகமாக்கியது .  அப்பரும்   மகிழ்ச்சியுடன்   அவர்களுடைய   இல்லத்தில்   அமுது   செய்து   விட்டு  திருப்பழனம்    திரும்பினார் .   அங்கு கோயில்   கொண்டிருக்கும்   ஆபத்சகாயபெருமானை    சேவித்து   'சொன்மாலை   பயில்கின்ற '  எனும்   பதிகம்   பாடி   அப்பூதி   அடிகளின்   பெருமையும்   குறிப்பிட்டு   அவரையும்   வாழ்த்தி   பாடினார் .  அங்கு   சிறிது   காலம்   தங்கிவிட்டு   மறுபடியும்   நல்லூர்   சென்றார் .  அங்கு   சிலகாலம்   தங்கி   பிறகு   தலயாத்திரை   புறப்பட்டார் .   சில   இடங்களை   தரிசித்த   பிறகு   திருவாரூர்   சென்றார் .  அங்கு    அவரை   வரவேற்க   ஏராளமான   பக்தர்கள்   கூடி   இருந்தனர் .  அவரை   பணிந்து   அழைத்து   சென்றனர் .

No comments:

Post a Comment