நாவுக்கரசர் ஈசனின் பெரும் கருணையை நினைத்து மெய்சிலிர்த்து போனார் . மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு மற்று ம் பல சிவாலயங்களை தரிசித்து பிறகு தில்லையை அடைந்தார் . அங்கு அவரை தில்லை வாழ் அந்தணர்கள் மிக்க அன்புடன் வரவேற்றனர் . சில நாட்கள் அங்கு தங்கி பல பதிகங்கள் பாடி அம்பலக்கூத்தனை மகிழ்வித்தார் . ஐயனும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் . பக்கத்தில் திருவேட்களம் திருக்கழிப்பாலை முதலிய இடங்களுக்கு சென்று அங்கு குடிகொண்டிருக்கும் பரம்பொருளையும் சேவித்து கொண்டு தில்லை திரும்பினார் . ஒருநாள் திருக்கழுமலத்தில் அன்னையிடம் ஞான பாலுண்டு கவிபாட தொடங்கிய ஞானசம்பந்த பெருமான் தங்கி இருப்பதாக கேள்விப்பட்டார் . அவரை காண பேராவல் கொண்டவராய் தில்லை ஈசனிடம் விடை பெற்று கொண்டு அடியார்கள் தொடர காழியம்பதியை நோக்கி புறப்பட்டார் .
No comments:
Post a Comment