Saturday, 11 June 2016

ஆனந்தம்  அடைந்த  புனிதவதியின்  பெற்றோர்   அவளை  அலங்கரித்து  பல்லக்கில்  உட்கார  வைத்து  சீர்வரிசைகளுடன்  பரமதத்தன்  வாழும்  இடத்திற்கு  அழைத்து  செல்ல  முற்பட்டனர் . விஷயம்  அறிந்த  பரமதத்தன்  தெய்வத்திற்கு  இணையாக  தான்  கருதும்  புனுதவதி தன்னை  தேடி  வருதல்  பாவமாக  கருதி  தன்  மனைவியையும்  குழந்தையையும்  கூட்டி  சென்று  மூவரும்  அவள்  காலடியில்  வீழ்ந்தனர் . எல்லோரும்  திகைத்து  மனைவிவை  வணங்குவதன்  காரணம்  கேட்டனர் . பரமதத்தன்  அவள்  சாதாரண  பெண்ணல்ல  தெய்வத்திற்கு  சமமானவள்  எல்லோரும்  வணங்க  வேண்டியவள்  என்று  கூறுகிறான் . தன்  பெண்ணிற்கு  அவள்  பெயர்  சூடி   இருப்பதையும்  கூறுகிறான் .எல்லோரும்  அதிர்ச்சி  அடைகின்றனர் .

No comments:

Post a Comment