Tuesday, 14 June 2016


கணவன்  வார்த்தைகளை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த  புனிதவதி  கணவனுக்கு  மகிழ்ச்சி  அளிக்காத  தன்  அழகை  அவள்  வெறுத்தாள் . ஈசனை  துதித்து  தன்  அழகை  அழித்து  தன்னை  எலும்பு  கூடாக  மாற்ற  வேண்டுகிறாள் . ஈசனும்  அவ்வாறே  அவளை  மாற்றுகிறார் . எல்லோரும்  அதிர்ச்சியும்  வேதனையும்  அடைகின்றனர் . புனிதவதி  அவர்களை  தேற்றிவிட்டு  அந்த  ஆடவல்லான்  கோயில்களை  தரிசித்து  அவன்  புகழை  பாட  விழைகிறாள் . பல  இடங்களுக்கு  சென்று  தரிசித்த  பின்  அவள்  கைலாயம்  செல்ல  ஆவல்  கொண்டு  ஐயன்  வாழும்  இடத்தை  காலால்  மிதிக்க  மனம்  ஒப்பாமல்  தலையாலேயே  நடந்து  செல்கிறாள் . இத்தகைய  பக்தியும்  மன  உறுதியும்  ஈசனையும்  தேவியையும்  அதிசயிக்க  வைக்கிறது .அம்மையே ! என்று   வரவேற்கிறார்கள் . இந்த  பாக்கியம்  யாருக்கு  கிடைக்கும் .

No comments:

Post a Comment