Thursday, 26 May 2016

இரண்டாவது  கனியை  உண்ட பரமதத்தன்  மிக  அதிசயமடைந்தான் . அந்த  கனி  அவன்  இதுவரை  உண்டிராத  அலாதி  சுவையுடன்  இருக்க  கண்டான் . அதிசயித்து  புனிதவதியிடம்   காரணம்   வினவினான் . அவளும்  மிகுந்த  தயக்கத்துடன்  நடந்ததை  கூரினாள் .  நடந்ததை  கேட்டு   அதிசயித்து  அவளை  கண்டான் . அவளை  மறுபடி  வரவழைக்க கூறுகிறான்  அவளால்  எடுக்கமுடிந்த  அக்கனி  அவனால்  தொடக்கூட  முடியவில்லை . அதிர்ச்சி  அடைந்த  அவனுக்கு  புனிதா  சதாரண  மானிட  பெண்ணாக  காண  முடி யவில்லை , அவள்  அன்னையாக  தோன்றினாள் . மனைவியாக  அவளை  நினைக்கவே  கூசினான் . அவளை  அன்னையாக  வணங்க  முற்பட்டான் .    

No comments:

Post a Comment