Wednesday, 18 May 2016

punitha

புனிதவதியும்  பரமதத்தனும்  மகிழ்ச்சியாக  வாழ்ந்து  கொண்டிருந்தனர் . ஒரு நாள்  பரம தத்தன்   இரு  மாங்கனிகளை  புனிதவதியிடம்  கொடுத்து  தான்  வந்து  உண்பதாக  சொல்லி  சென்றான் . அவளும்  அவைகளை பெற்றுக்கொண்டு  உள்ளே  வைத்தாள் . அப்போது  ஒரு  சிவனடியார்  வந்து  வாசலில்  நின்று  பசிக்கு  உணவளிக்க  கூறினார் . புனிதவதி  தன்  கணவர்  கொடுத்தா  கனிகளில்  ஒன்றை  சிவனடியார்க்கு  மிக்க  மகிழ்க்ச்சியுடன்  ஈந்தாள் . சிறிது  நேரத்தில்  அவள்  கணவன்  வந்து  அக்கனியை  கொண்டு  வருமாறு  கூறினான் . அவளும்  இருந்த  ஒரு  கனியை  கொண்டவந்து  கொடுத்தாள் . அதை  உண்ட  கணவன்  அதன்  ருசியில்  மயங்கி மற்ற  ஒன்றையும்  கொண்டு  வருமாறு  கூறுகிறான் . திடுக்கிட்ட  புனிதவதி  ஈசனிடம்  மன்றாடுகிறாள் . ஈசன்  மற்றொரு  கனி தந்து  மறைகிறார் . மகிழ்ச்சியுடன்  அதை  கணவனுக்கு  தருகிறாள் . 

No comments:

Post a Comment