Thursday, 12 May 2016

11 திருமுறையில்  அடுத்த  பாடல்களை  பாடியவர்   காரைக்கால்  அம்மையார் . காரைக்கால்  கிழக்கு  தமிழகத்தில்  கடற்கரையில்  உள்ள  வாணிப  துறைமுகம் .அத்துறைமுகம்   வெளிநாடுகளுடனும்  வியாபாரம்  நடைபெற்று  வந்த வளம்  மிகுந்த  இடம் . அங்கு தனதத்தர்  என்பவர்  மிக  செல்வாக்கு  உடைய  வணிகர்  அவர்  தவம்  இருந்து  பெற்ற  ஒரே  மகள்  புனிதவதி . அக்குழந்தை  சிறு  வயது  முதல்  அந்த  ஆடவல்லான்  இடத்தில்  மிக  பக்தி  கொண்டவளாக  இருந்தாள் .அவர்  ஆடலில்  மிககவரப்பட்டவளாக  இருந்தாள் . அவரை  பற்றி  பேசுவதே  அவளுக்கு  மிக  ஆனந்தம்  அளித்தது
. அவளும்  வளர்ந்து  அழகு  பண்பு , பக்தி  எதிலும்  சிறந்து  திகழ்ந்தாள் . அவள்  பெற்றோர்  அவளை  நாகபட்டினத்தை  சேர்ந்த  பரமதத்தன்  என்னும்  வணிக  வாலிபனுக்கு  மணமுடித்து  வைத்தனர் .

No comments:

Post a Comment