Wednesday, 27 January 2016

pasupathi

திருமூலரின்  உபதேசம்  நாம்  உய்வதற்கு  பெரும்  வழிகாட்டி . பசு , பதி .பாசம்  இவை பற்றி  விளக்குகிறார் . பதி  சிவம் . பசு  ஆன்மாக்கள் . பாசம்  மாயை . இம்மூன்றுமே  அநாதியானது . அழிவில்லாதது . அந்த ஈசன்  அருளால்  ஆன்மாக்கள்  அவரவர்  பாவபுண்ணியங்களை  பொறுத்து  இம்மண்ணில்  பிறவி  எடுக்கின்றன . இவ்வுலகில்  மாயையில்  சிக்குண்டு  பல  வகை  பாவ புண்ணியங்களுக்கு  ஆளாகின்றன .  ஈசனால்  உண்டாக்கப்பட்ட  வேத  ஆகமங்கள்  நமக்கு  வழி  காட்டுகின்றன . அதையே  அடிப்படையாக  கொண்டு  திருமுலர்  நமக்கு  இவ்வுபதேசத்தை  வழங்குகின்றார் . இதை  பின்பற்றி  வாழ்பவர்கள்  பிறவா  நிலை  எய்துகின்றனர் .

No comments:

Post a Comment