திருமூலரின் உபதேசம் நாம் உய்வதற்கு பெரும் வழிகாட்டி . பசு , பதி .பாசம் இவை பற்றி விளக்குகிறார் . பதி சிவம் . பசு ஆன்மாக்கள் . பாசம் மாயை . இம்மூன்றுமே அநாதியானது . அழிவில்லாதது . அந்த ஈசன் அருளால் ஆன்மாக்கள் அவரவர் பாவபுண்ணியங்களை பொறுத்து இம்மண்ணில் பிறவி எடுக்கின்றன . இவ்வுலகில் மாயையில் சிக்குண்டு பல வகை பாவ புண்ணியங்களுக்கு ஆளாகின்றன . ஈசனால் உண்டாக்கப்பட்ட வேத ஆகமங்கள் நமக்கு வழி காட்டுகின்றன . அதையே அடிப்படையாக கொண்டு திருமுலர் நமக்கு இவ்வுபதேசத்தை வழங்குகின்றார் . இதை பின்பற்றி வாழ்பவர்கள் பிறவா நிலை எய்துகின்றனர் .
No comments:
Post a Comment