Sunday, 10 January 2016

அன்பும்  சிவமும்  இரண்டென்பர்  அறிவிலார்
அன்பே  சிவமாவது  யாரும் அறிகிலார்
 ஈசனை  அடைய  ஒரே  மார்க்கம்  அன்பு,  அனபு  ஒன்றே . அது   அன்றி  வேறில்லை  .
''அன்போடு  உருகி  அகம்  குழைவார்கன்றி '' வேறு  யார்க்கும்  எய்த  ஒண்ணாதே . என்று  அழுத்தமாக  கூறுகிறார் . உடலை  வருத்தி  செய்யும்  எவ்விதமான  பிரார்த்தனைகளோ , சடங்குகளோ  ஈசனை  குளிர  வைக்காது , அன்பே  அவரை  மகிழ்விக்கும் .அன்புக்கு  கட்டுப்படும்  அவர்  தம்  அடியோர்களுக்காக  எத்தனை  இறங்கி  வருகிறார்  என்பதை  நாயன்மார்கள்  கதைகளில்  நாம்  கண்டோம் . கூலி  ஆளாக  வந்து  பிரம்படி  படுகிறார் . பொதி  சோறு  சுமக்கிறார் . வீதியில்  நடந்து  தூது  போகிறார் .அன்புக்கு  அடிபணிந்து  எதையும்  செய்ய  தயங்காதவர் . திருமூலர்  இதையே  அழுத்தமாக  கூறுகிறார் . 

No comments:

Post a Comment