Friday, 15 January 2016

திருமூலர்  திருமந்திரத்தை  தை  மாதம்  முதல்  நாள்  எழுத  தொடங்கியதாக  கூறப்படுகிறது .  தன்னுடைய  இப்பெரும்   படைப்பை  சிவபிரானின்   பெருமையை  சொல்லி  தொடங்குகிறார் . நந்தி  தேவரை   ஈசனுக்கு  ஒப்பானவராகவே  குறிப்பிடுகிறார் . நந்தி  தேவரிடம்  கல்வி  பெற்றதை  விளக்குகிறார் .
நந்தி  அருள்  பெற்ற  நாதரை  நாடிடின்  நந்திகள்  நால்வர்  சிவயோக  மாமுனி
மன்று  தொழுத  பதஞ்சலி  வியாக்ரமர்  என்றிவர்  என்னோடெண் மரு மாமே |

சனகாதி  முனிவர்கள்  நால்வர் , சிவயோக  மாமுனி , பதஞ்சலி  மற்றும்  வியாக்கிரபாதர்  போன்றோருடன்  எண்மர்  நந்தி  தேவரிடம்  ஆகமங்கள்  பயின்றதாக  குறிப்பிடுகிறார் .



 

No comments:

Post a Comment